திருவள்ளுவர்

Матеріал з விக்கிமேற்கோள்
திருவள்ளுவர்

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்களில் இருந்து இந்த மேற்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள்[ред.]

  • துன்பத்தைச் சிரித்து துரத்திவிடு.[1]
  • பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல.[2]
  • பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே.[3]
  • நன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும் [4]
  • உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும்.[5]
  • மழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும்.[6]
  • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.[7]
  • நீரின்றி அமையாது உலகு [8]

நபர் பற்றிய மேற்கோள்கள்[ред.]

  • திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய். திருவள்ளுவர் பிறந்தது பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. —கி. ஆ. பெ. விசுவநாதம்[9]

சான்றுகள்[ред.]

  1. 621ஆவது திருக்குறள்
  2. 641ஆவது திருக்குறள்
  3. 655ஆவது திருக்குறள்
  4. 503 ஆவது திருக்குறள்
  5. 520 ஆவது திருக்குறள்
  6. 211ஆவது திருக்குறள்
  7. 739 ஆவது திருக்குறள்
  8. 20 ஆவது திருக்குறள்
  9. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.

பிற இணைப்புகள்[ред.]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: